அதன் பேரில் வழக்கு பதிவு செய்து காணமல் போன மனோகரனை போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். பின்னர் அவரது செல்பேசியில் காணமல் போகும் முதல் நாள் 34 பேரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது தெரியவந்தது. அதில், கடைசியாக அவரது குடியிருப்பு பகுதியில் உள்ள பாண்டியம்மாளிடம் பேசியுள்ளது தெரியவந்தது. அதையடுத்து, அவர் வசித்த பகுதியில் உள்ளவர்களிடமும், அங்கு கடை நடத்தி ஆறுமுகம், அவரது மனைவி பாண்டியம்மாளிடமும் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து இருவரும் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது போலீஸாருக்கு திருப்பமாக அமைந்ததால் தீவிரமாக விசாரணை செய்யத் தொடங்கினார்கள். இதற்கிடையே திருச்செல்வி கணவரை கண்டுபிடித்து தரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஏப்.9 தேதி தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் வருகிற ஏப்-25ம் தேதிக்குள் கண்டுபிடித்து தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவி்ட்டது.